பதிவு செய்த நாள்
19
ஜூன்
2019
12:06
அவிநாசி: கருவலூரில் உள்ள, ஸ்ரீகமலாம்பிகை உடனமர் ஸ்ரீகங்காதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று (ஜூன்., 18ல்) கோலாகலமாக நடந்தது.
கருவலூரில் உள்ள ஸ்ரீகமலாம்பிகை உடனமர் கங்காதீஸ்வரர் கோவில், நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 14ம் தேதி துவங்கியது.தீர்த்தக்குடம், முளைப்பாலிகை எடுத்து வருதல், திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, யாகசாலை யில் கலசங்கள் எழுந்தருளுதல், முதல் கால வேள்வி பூஜை ஆகியவை நடந்தன நேற்று, 18ல், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் ஆறாம் கால வேள்வி, பேரொளி வழிபாடு நடந்தது.
காலை, 9:30 - 9:45 மணிக்குள், கோவில் விமானம் மற்றும் மூல மூர்த்திகளுக்கு, கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார், காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, பெருங்கோட்டுக் காவு பங்கஜன் குருசாமி ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.