திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், ஞானானந்தா நிக்கேதனுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை தந்தார்.காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 5 நாட்களாக திருவண்ணாமலை சங்கர மடத்தில் தங்கி சந்திரமவுலீஸ்வரர் பூஜை மேற்கொண்டிருந்தார். நேற்று 18ல், திருச்சி செல்லும் வழியில், திருக்கோயிலூர், தபோவனம், ஞானானந்த நிகேதனில் நித்யானந்தகிரி சுவாமிகளை சந்தித்து உரையாடினார்.அப்போது நிகேதன் வளாகத்தில் அமைந்துள்ள ஆதிசங்கரர், விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் திருச்சி திருவானைக்காவல் புறப்பட்டுச் சென்றார்.