மரக்காணம்:மரக்காணத்தில் கண்டெடுக்கப்பட்ட மகா விஷ்ணு கற்சிலையை தாசில்தார் பார்வை யிட்டார்.மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெரு பகுதியில் நேற்று முன்தினம் (ஜூன்., 17ல்) மண்ணில் புதைந்து இருந்த மகா விஷ்ணு கற்சிலையை அப்பகுதி மக்கள் கண்டெடுத்தனர்.
பின்னர், அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒரு பேரலில் தண்ணீர் நிரப்பி அதற்குள் சிலையை வைத்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் தாசில்தார் தனலட்சுமி, மண்டல துணை தாசில்தார் ஏழுமலை மற்றும் வருவாய் துறையினர் அந்த சிலையை பார்வை யிட்டனர்.தாசில்தார் தனலட்சுமி கூறுகையில், இந்த சிலை எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது, இந்த இடத்திற்கு எப்படி வந்தது. என்பது பற்றி தொல்லியல் துறையினர்தான் ஆய்வு செய்து கூற வேண்டும். எனவே இது குறித்து ஆய்வு செய்ய அந்ததுறை அதிகாரிகளுக்கு முறைப்படி பரிந்துறை செய்ய உள்ளோம் என்றார்.