புதுக்கோட்டை : தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி, புதுக்கோட்டை அருகே இஸ்லாமியர்கள் அம்புலி ஆற்றில் இறங்கி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் கடும் வறட்சியால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு, குடிநீரும் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக பருவமழையும் மாவட்டத்தில் பொய்த்து விட்டது. அதிக விலை கொடுத்து, தண்ணீர் வாங்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் மழை அதிக அளவு செய்ய வேண்டும் குடிநீர் பிரச்னை தீர வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆலங்குடி பகுதியில் உள்ள இஸ்லாமிய பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கடைகளை நேற்று காலை, 10.00 மணிமுதல் 11.00 மணி வரை ஒரு மணி நேரம் அடைத்தனர். பின் ஆலங்குடியில் உள்ள அம்புலி ஆறு அருகே சிறப்பு தொழுகை மற்றும் மழை வேண்டி கூட்டுப் பிரார்த்தனையும் செய்தனர். இதில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.