சபரிமலை, ஆனி மாத பூஜைகளுக்காக திறந்த நடை இன்று இரவு 10:00 மணிக்கு அடைக்கப்படுகிறது.
ஜூன் 15- மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 16-ம் தேதி அதிகாலை நெய்யபிஷேகம் தொடங்கியது. இன்று 12:00 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறுகிறது. எல்லா நாட்களிலும் காலையில் உஷபூஜை, பகல் களபாபிஷேகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது.தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை தொடங்கி 8:00 மணிக்கு நிறைவு பெற்றது. 18 படிகளும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜையை நடத்தினார். இன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.