Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை இன்று அடைப்பு இதற்கும் தினக்கூலியா? கோவிலில் அவலம்! இதற்கும் தினக்கூலியா? கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
1500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
11:06

திருவண்ணாமலை, ஜூன் 20-திருவண்ணாமலையில், 1,500 ஆண்டுகள் பழமையான, முருகன், விநாயகர் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவண்ணாமலையை அடுத்த, தி.வலசை கிராம விவசாய நிலத்தில், 16ல், இரண்டு கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து, கிராம மக்கள், திருவண்ணாமலை தொல்லியல் மையத்துக்கு, தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, மைய தலைவர், நீதிதாஸ், தொல்லியல் அறிஞர், ராஜவேலு தலைமையிலான குழுவினர், அங்கு சென்று, ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, தொல்லியல் அறிஞர், ராஜவேலு கூறியதாவது:-கண்டெடுக்கப்பட்ட, முருகன் மற்றும் கதிர் விநாயகர் கற்சிலைகள், 1,500 ஆண்டுகள் பழமையானவை என, தெரிய வந்துள்ளது. இரண்டும், பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.தாமரை மலரின் மேல், நின்ற நிலையில் இருக்கும் முருகன் சிலை, அரிதான ஒன்று. ஆறுமுகனின், மூன்று முகங்கள் மட்டுமே தெரியும் வகையில், சிலை நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.சிலையின் இடது கையில் உள்ள வில்லை, முருகன் திருப்பி பிடித்து உள்ளார்.அதனால், போர் முடிந்த பின் காட்சியாக, சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிலையின், வலது கீழ்ப்புறத்தில், ஏழு வரிகளுடன் கூடிய, சிறிய எழுத்து பகுதியும் இடம் பெற்றுள்ளது.அங்கு, செங்கற்களால் கட்டப்பட்ட, ஒரு கோவில் இருந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது. நான்கு கைகளுடன் கூடிய, கதிர் விநாயகர் சிலை குறித்து, ஆய்வு நடத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 
temple news
குளித்தலை: கீழ தாலியாம்பட்டி கிரா மத்தில், மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை முன் னிட்டு கடந்த, 5ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar