பதிவு செய்த நாள்
20
ஜூன்
2019
12:06
தஞ்சாவூர், தஞ்சை பெரியகோவில் சர்வதேச யோகா தினத்தை முன்னட்டு, கல்லுாரி மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்துக்கொண்டு யோகா செய்தனர்.
சர்வதேச யோகா தினம் நாளை(21ம் தேதி) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் சார்பில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கடந்த 16ம் தேதி முதல் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், யோகா மூலம் எந்த அளவிற்கு உடல் நலனை பாதுகாக்க முடியுமென விளக்கியும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதைபோன்று, தஞ்சை பெரியகோவிலில், இன்று காலை 7 மணி முதல் 8 மணி, தஞ்சை மருத்துவகல்லுாரி, இந்திய பயிர் பதன தொழில்நுட்ப கழக மற்றும் தனியார் கல்லுாரி என 500 பேர் கலந்துக்கொண்டு யோகாவின் அனைத்து நிலைகளையும் செய்முறை விளக்கம் மூலம் செய்து காட்டினர். இதில் மத்திய சுற்றுலா துறை உதவி இயக்குநர் பஸ்வான், சுற்றுலா அலுவலர் நந்தகுமார், தஞ்சை மருத்துகல்லுாரி மருத்துவனை முதல்வர் குமுதா லிங்கராஜ், தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, பெரியகோவில் செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இண்டாக் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் செய்து இருந்தார்.