பதிவு செய்த நாள்
21
ஜூன்
2019
12:06
தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், அதிகாலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. இது, எஸ்.வி.ரோடு, கடைவீதி, மகாத்மா காந்தி சாலை, வெளிபேட்டை தெரு, சுண்ணாம்புக்கார வீதி உள்ளிட்ட, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை அடைந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள, விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தன.