பதிவு செய்த நாள்
22
ஜூன்
2019
02:06
சென்னை : சிட்லபாக்கம், திருமுருகன் சாலையில் அமைந்துள்ளது, நாகவல்லி அம்மன், மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோவில். இக்கோவிலில், பரிவார மூர்த்திகளுக்கு, தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், நாளை நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு, நேற்று (ஜூன்., 21ல்) முதல், யாக சாலை வளர்க்கப்பட்டு, விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரஹ ஹோமம், தன பூஜை,லட்சுமி ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தன.
விழாவின் இரண்டாம் நாளான இன்று (ஜூன்., 22ல்), விசேஷ சந்தி யாக பூஜை, மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சார்த்துதல், புது விக்ரஹங்களுக்கு அஷ்டபித்திரியைகள், கோபுர கலசங்கள் ஸ்தாபனம் ஆகியவை நடக்கின்றன.
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக நாளான, நாளை (ஜூன்., 23ல்) காலை, 7:00 மணி முதல், நான்காம் கால யாக பூஜைகள் துவங்குகின்றன. இதைத் தொடர்ந்து, பிம்பசுத்தி, ரக்ஷா பந்தனம், மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம் கடம் புறப்பாடு நடக்கிறது.
காலை, 10:00 மணிக்கு விமான கலசங்களுக்கு கும்பநீர் சேர்த்தல், காலை, 10:30 மணிக்கு, மூலவர் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. நாளை (ஜூன்., 23ல்) மாலை சுவாமி, திருவீதி புறப்பாடு நடக்கிறது. ஆலய சிவாச்சாரியார் குருமூர்த்தி தலைமையில், சேதுராம சிவாச்சாரியார் கும்பாபிஷேக த்தை நடத்தி வைக்கிறார். விழாவை முன்னிட்டு, தினமும், கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன. விழா ஏற்பாட்டை, கோவில் நிர்வாகிகள், விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.