பதிவு செய்த நாள்
22
ஜூன்
2019
03:06
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சீதாராம ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள், மிருத்திகா பிருந்தாவனம் கும்பாபிஷேக விழா நாளை (23ம் தேதி) நடக்கிறது.
பொள்ளாச்சி ராமர் கோவில் வீதியில், சீதாராம ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள், மிருத்திகா பிருந்தாவனம் கும்பாபிஷேக விழா கடந்த, 17ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.
தினமும் காலை, 7:00 மணி முதல், 12:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரையும் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடந்தது.இன்று காலை, 7:00 மணிக்கு முதல் கால யாகபூஜை, ராம மகா மந்திர ஹோமம், தப்த ஹோமம், கலசாதி ஹோமம், விஷ்ணு காயத்ரிஹோமம், மதியம், 12:00 மணிக்கு பூர்ணாகுதி பூஜையும் நடக்கிறது. மாலை, 6:00 மணி க்கு இரண்டம் கால யாக பூஜை, மண்டல பூஜையும்; இரவு பூர்ணாகுதி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.நாளை (23ம் தேதி) காலை, 7:00 மணிக்கு பிரதிஷ்டை ஹோமம், காலை, 11:30மணிக்கு பூர்ணாகுதியும் நடக்கிறது. காலை, 11:45 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா, மதியம், 12:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் நடக்கிறது.