தேவிபட்டினம் : தேவிபட்டினம் ஆர்.சி.,தெரு புனித சவேரியார் ஆலய விழா ஜூன் 10 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடுகளும், கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. ஜூன் 18 ல் திருவிழா திருப்பலியும், 19ல் புது நன்மை திருப்பலியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் (ஜூன்., 20ல்)இரவு சவேரியார் தேர்பவனி விழா நடைபெற்றது. விழாவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சவேரியார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்னதானம் நடந்தது.