பதிவு செய்த நாள்
22
ஜூன்
2019
03:06
திருவள்ளூர்: திருவோணத்தை முன்னிட்டு, நேற்று (ஜூன்., 21ல்), வீரராகவர் கோவிலில், பெரு மாள் மாட வீதியில் எழுந்தருளினார்.திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், சிரவண நட்சத்திரத் தன்று, பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். நேற்று (ஜூன்., 21ல்), திருவோண த்தை முன்னிட்டு, தேசிகன் திருமஞ்சனம், காலை, 7:00 மணிக்கும், பெருமாள் திருமஞ்சனம், காலை, 9:30 மணிக்கும், தாயார் திருமஞ்சனம், 10:30 மணிக்கும் நடைபெற்றது. பெருமாள், தேசிகன் மாடவீதி புறப்பாடு, மாலை, 5:30 மணிக்கும், பெருமாள் தாயார் தேசிகன் உள் புறப்பாடு, மாலை, 6:00 மணிக்கும் நடைபெற்றது.