பதிவு செய்த நாள்
22
ஜூன்
2019
03:06
அச்சிறுப்பாக்கம்: பெரும்பேர் கண்டிகை கிராமத்தில், பொங்குநாச்சீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா, நேற்று (ஜூன்., 21ல்), கோலாகலமாக நடைபெற்றது.
மதுராந்தகம் தாலுகா, அச்சிறுப்பாக்கம் அடுத்த, பெரும்பேர்கண்டிகை கிராமத்தில், பொங்கு நாச்சீஸ்வர் கோவில்கள் உள்ளன. இக்கோவில், திருப்பணிகள், ஓராண்டுக்கு முன் துவக்கப் பட்டு, நணிகள் நடைபெற்றுவந்தன.
சில நாட்களுக்கு முன், திருப்பணிகள் நிறைவடைந்து, 18 ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன்,
கும்பாபிஷேக விழா, துவங்கியது. நேற்றுகாலை, சிறப்பு யாகமும், காலை 7:30 மணியிலிருந்து 9:00 மணிக்கு, கலசங்கள் புறப்பட்டு, பாலவிநாயகர், பொங்குநாச்சீஸ்வரர், சப்தகன்னியம்மன், பெரியாண்டவர் ஆகிய கோவிலில், புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேக விழா, நடைபெற்றது.
பெரும்பேர்கண்டிகை கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு, பிரசாதம், அன்னதானம் வழங்கினர். விழா
ஏற்பாடுகளை, உபயதாரர், எஸ்.எம்.சேகர் மற்றும் கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.