பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
12:06
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சீதாராம ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி கள், மிருத்திகா பிருந்தாவனம் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
பொள்ளாச்சி ராமர் கோவில் வீதியில், சீதாராம ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள், மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த கோவிலில் ஆஞ்சநேயர் சிலையும், 1950ம் ஆண்டு, சீதாராமர் கல்யாண கோலம் மற்றும் 1972ம் ஆண்டில், ராகவேந்திரர் பிருந்தாவனம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோவிலில், 2012ம் ஆண்டு புனரமைப்பு திருப்பணிகள் துவங்கப்பட்டு, தற்போது முடிக்கப்பட்டுள்ளன.பணிகள் முடிந்ததையடுத்து, கும்பாபிஷேக விழா கடந்த, 17ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் முதல்கால யாகபூஜை, ராம மகா மந்திர ேஹாமம், தப்த ேஹாமம், கலசாதி ேஹாமம், விஷ்ணு காயத்ரிேஹாமம் நடந்தது.தொடர்ந்து, அனுமன் மார்பினை திறந்து காட்டுவது போன்றும், ராமர், சீதா அருகில் இருப்பது போன்ற சுவாமி சிலை வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு பிரதிஷ்டா ேஹாமம், காலை, 11:30 மணிக்கு பூர்ணாகுதியும் நடந்தது.உடுப்பி பேஜாவர் விஸ்வேஸ தீர்த்த சுவாமிகள் மற்றும் இளைய சுவாமி விஸ்வ ப்ரஸன்ன தீர்த்த சுவாமிகள் தலைமையில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.