பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
12:06
கிருஷ்ணகிரி: மருதேப்பள்ளி கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அருகே உள்ள மருதேப்பள்ளி கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவிலில், 19ம் ஆண்டு மஹாபாரத திருவிழா கடந்த, 3ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, 18 நாட்களும், பெரியசெட்டிப்பள்ளி கனகமணியின் கவி பாடல்களும், மஹாபாரத சொற்பொழிவும் நடந்து வந்தது. அதே போல் கடந்த, 7 முதல் இரவில், போதகுட்டை கணபதி நாடக சபா குழுவினரின் பல்வேறு நாடகங்கள் நடந்தன. இதில், கடந்த, 9ல் பாண்டவர் பிறப்பு நாடகமும், 12ல் சுபத்திரை கல்யாணமும், 15ல் அர்ச்சுனன் தபசு நாடகமும், 18ல் அரவாண் கடபலியும், 20ல் கர்ணன் மோட்சமும் நடந்தது. நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சியுடன் பாஞ்சாலி தேவி, கூந்தலை முடிக்கும் நிகழ்வும் நடந்தது. இதில், ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மருதேப்பள்ளி கிராமத்தினர் செய்திருந்தனர்.