பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
01:06
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் சுப்ரமணியர் கோவில் கும்பாபி ஷேகம் நடந்தது.நேற்றுமுன்தினம் (22ம் தேதி) மாலை 6:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், லட்சுமி ஹோமம், முதற்கால பூஜை, மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று (23ம் தேதி) காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கோமாதா பூஜை, சுமங்கலி பூஜை, நாடிசந்தானம், காலை 10:00 மணிக்கு கடம்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, விநாயகர், ஆஞ்ஜநேயர், சுப்ரமணியர் கோவில்கள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.