பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
02:06
பொன்னேரி: மெதூர், திருப்பாலைவனத்தில் உள்ள சிவாலயங்களில் உழவார பணிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.சென்னையில் உள்ள ஹிந்து கோவில்களை சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தின் சார்பில், நேற்று 23ல் பொன்னேரி அடுத்த, மெதூர், பருவதீஸ் வரர் மற்றும் திருப்பாலைவனம், திருப்பாலீஸ்வரர் கோவில்களில், 212வது உழவாரப் பணிகள் நடைபெற்றன.
விழிப்புணர்வுகோவில்களின் தூய்மை, நலன், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் போது, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வலியுறுத்தப்பட்டது. கோவில்களை தூய்மையாக வைத்திருத்தல், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது, குளம் பராமரிப்பு, குளத்தை சார்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்வள ஆதாரத்தை பெருக்குதல், சிலை திருட்டை தடுப்பதற்கான வழியை உருவாக்குதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில், பருவ தீஸ்வரர் கோவில் குளத்தில் இருந்து, குப்பை மற்றும் செடி, கொடிகளை அகற்றி சுத்தப்படுத்தப்பட்டது.
மரக்கன்றுஅதை தொடர்ந்து பொது மக்களுக்கு துணிப்பை வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகளும் நடப்பட்டன.ஹிந்து கோவில்களை சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் கூட்டு வழிபாடு மேற்கொண்டனர்.