பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
02:06
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் சர்ச்சில், நேற்று (ஜூன்., 23ல்) தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது.மேட்டுப்பாளையத்தில் உள்ள புனித அந்தோணியார் சர்ச்சில் கடந்த, 18ம் தேதி தேர்த்திருவிழா நிகழ்ச்சி துவங்கியது. ஒவ்வொரு நாளும் திருப்பலி நடைபெற்று வருகிறது. நேற்று (ஜூன்., 23ல்) காலை, 8:30 மணிக்கு திருவிழா கொடியேற்றம் திருப்பலி துவங்கியது.
பங்கு பாதிரியார் ரொசாரியொ தலைமையில், அற்புதகெபி அன்னை வேளாங்கண்ணி சர்ச் பங்கு பாதிரியார் ஜேக்கப் திருப்பலியை நிறைவேற்றி, புனித அந்தோணியார் உருவம் போட்ட கொடியை, புதிய கொடி மரத்தில் ஏற்றினார்.வரும், 29ம் தேதி வரை திருப்பலி, தேர்பவனி, நவநாள், அருளுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 30ம் தேதி காலை, 8:30 மணிக்கு கோவை ஆயர் தாமஸ் அக்குவினாசிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. தொடர்ந்து ஆயர், குழந்தைகளுக்கு உறுதி பூசுதல், முதல் நற்கருணை அருட்சாதனம் வழங்கி திருப்பலியை நிறைவேற்ற உள்ளார். மாலையில், புனித அந்தோணியாரின் அலங்கார தேர்பவனி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் ரொசாரியொ மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.