பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
02:06
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவிலில் உள்ள மாரியம்மன் கோவிலில் அ.தி.மு.க., சார்பில் மழை வர வேண்டி சிறப்பு யாகம் , அபிஷேகம் நடந்தது.எம்.எல்.ஏ., முருகுமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வாசு முருகையன், நகர செயலாளர் எம்.ஜி.ஆர். தாசன் , முன்னாள் ஒன்றிய செயலாளர் அறிவுக்கரசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அசோகன் வரவேற்றார்.நிர்வாகிகள் டாக்டர் பாலசுப்ரமணியன், தோத்தாத்திரி பாலசந்தர், செந்தில்குமார் ,சிவப்பிரகாசம் , சிவக்குமார் , சுவாமிநாதன் , முருகானந்தம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். நகர பொருளாளர் வசந்தகுமார் நன்றி கூறினார். இதில் பொது மக்களும் பங்கேற்றனர்.