புதுச்சேரி உலக முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2019 02:06
புதுச்சேரி: புதுச்சேரி, பாரதி வீதியில் அமைந்துள்ள உலக முத்து மாரியம்மன் கோவிலில், 6 ம் ஆண்டு கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது.கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழாவையொட்டி, நேற்று (ஜூன்., 23ல்) காலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. 9:00 மணிக்கு திருவிய ஹோமமும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. 9:30 மணிக்கு பூரணாஹீதி மற்றும் 11:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேக தின விழாவையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் அறங்காவல் குழு தலைவர் ஆளவந்தார் தலைமையில், துணைத் தலைவர் ராமமூர்த்தி, செயலர் ஜெனார்த்தனன், பொருளாளர் சண்முகசாமி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.