கீழக்கரை : கீழக்கரை 500 பிளாட் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் உலக நன்மை க்காகவும், மழை வேண்டியும் காலையில் சிறப்பு தொழுகை நடந்தது. கீழக்கரையில் உள்ள அனைத்து கிளை நிர்வாகிகளும், ஏராளமான முஸ்லிம்களும் தொழுகையில் பங்கேற்றனர்.
சிறப்பு துஆ ஓதப்பட்டது.கிளைத்தலைவர் சுல்தான் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் ஆரிப்கான், மேற்கு கிளை செயலாளர் ஹமீது இப்ராகீம், தினாஜ்கான் ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. 50 மரக்கன்றுகள் அப்பகுதியில் நடப்பட்டது.