பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
02:06
நகரி: திருத்தணி, முருகன் கோவிலில் நடக்கவுள்ள ஆடிக் கிருத்திகை உற்சவ விழாவிற்காக, தமிழக, ஆந்திரா அரசு சார்பில், மொத்தம், 275 பஸ்கள் இயக்க தீர்மானித்துள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலில், அடுத்த மாதம், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை ஆடிக்கிருத் திகை மற்றும் தெப்பத் திருவிழா உற்சவம் நடக்கிறது.விழாவில், தமிழகம், ஆந்திரா, கர்நாட கம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து, முருகப் பெருமானை தரிசிப்பர்.பக்தர்கள் வசதிக்காக, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநில போக்குவரத்து சார்பில், கூடுதல் பஸ்கள் இயக்குவது குறித்து, இரு மாநில போக்குவரத்து அதிகாரிகள் தற்காலிக ஒப்பந்த நிகழ்ச்சி, காஞ்சிபுரம் கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடந்தது.இதில், தமிழக அதிகாரிகள் ராஜசேகர், எத்திராஜ், ரகுராமன், ஸ்ரீதர், ஆந்திரா அதிகாரிகள், செங்கல்ரெட்டி, மதுசூதனன், புத்தூர் டிப்போ மேலாளர் பிரசாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், திருப்பதி, சென்னை, காளஹஸ்தி, காஞ்சிபுரம், வேலூர், சித்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து, திருத்தணி நகருக்கு, ஆந்திரா சார்பில், 140 பஸ்கள், தமிழகம் சார்பில், 135 பஸ்கள் என, மொத்தம், 275 பஸ்கள் இயக்குவது என, தீர்மானிக்கப்பட்டது.இந்த சிறப்பு பஸ்கள், அடுத்த மாதம், 24ம் தேதி முதல், 30ம் தேதி வரை, 7 நாட்கள் இயக்கப்படும் என, இரு மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.