மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த, மாரிபுத்தூரில் உள்ள செல்லியம்மன் கோவில் கும்பாபிஷே கம் நேற்று (ஜூன்., 23ல்) கோலாகலமாக நடைபெற்றது.மாரிபுத்தூர், செல்லியம்மன் கோவிலில், ஆடி மாதம், நடைபெறும் தேர் பவனி சுற்று வட்டாரப் பகுதிகளில் புகழ் பெற்ற உற்சவமாக உள்ளது. இந்தத் கோவில், சுமார், 80 லட்ச ரூபாய் அளவில் புனரமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று (ஜூன்., 23ல்), இக்கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகளும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.