பதிவு செய்த நாள்
24
ஜூன்
2019
03:06
மாமல்லபுரம்: பாறை சிற்பங்கள், மழையால், மாசு அகன்று, பொலிவு பெற்றது. பல்லவர் காலபாறை சிற்பங்களுக்கு புகழ்பெற்ற மாமல்லபுரம், சுற்றலா இடமாக விளங்குகிறது.
கடற்கரை பின்னணியில் அமைந்த கற்கோயில்: ஒரே பாறையை, வெவ்வேறு ரதமாக செதுக்கிய, ஐந்து ரதங்கள்: பாறை விளிம்பில் புடைத்த, அர்ச்சுணன் தபசு: பாறைக்குன்றின் உட்புறம் குடைந்த, குடவரை மண்டபங்கள் உள்ளிட்டவை, சுற்றுலாப் பயணியரை கவர்கின்றன.
காற்றில் பரவும் தூசு, பறவை எச்சம், வாகன புகை உள்ளிட்டவற்றால் மாசடைந்து, இவை பொலிவை இழக்கின்றன.
தொல்லியல் துறை, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை, சிற்பங்களில் ரசாயன கலவை பூசி அகற்றி, தூய்மைப்படுத்துகிறது. கோடை விடுமுறையில், வாகனங்கள் குவிந்து, அவற்றின் புகை, சிற்பங்களில் படிந்து மாசடைந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களாக இரவில் மழை பெய்து, சிற்பங்களில் படிந்த மாசுக்கள், மழைநீரில் அகன்று, இயற்கை தன்மையுடன் பளிச்சிடுகின்றன.