விருதுநகர்: விருதுநகர் ஷீரத் கமிட்டியின் சார்பில் அகமது நகர் ஹாஜி சிக்கந்தர் ஹவ்வா பீவி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மனாருல் ஹூதா மதரஸா பள்ளிவாசல் திட லில் வைத்து மழை வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. 500 பேர் பங்கேற்றனர்.
ஷீரத் கமிட்டி தலைவர் ஹாஜி ஷீராலால், பெரிய பள்ளி வாசல் உறுப்பினர் எஹியாஹ், மதினா பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், கல் பள்ளிவாசல், கலெக்டர் பள்ளி வாசல் ஆகிய பள்ளி வாசலை சேர்ந்த நிர்வாகிகள், தலைவர்கள், ஹஜ்ரத்துகள் பங்கேற்றனர்.