பதிவு செய்த நாள்
25
ஜூன்
2019
01:06
மேட்டூர்: எம்.எல்.ஏ., தலைமையில் யாகம் நடத்தி, புனித நீரை மேட்டூர் அணையில் ஊற்றி, வழிபாடு செய்த ஒரு மணி நேரத்தில் பலத்த மழை பெய்தது, அ.தி.மு.க.,வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சேலம் மாவட்டம், மேட்டூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று எம்.எல்.ஏ., செம்மலை தலைமையில், அ.தி.மு.க.,வினர் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தினர். இதில், நகர செயலாளர் சந்திரசேகரன், முன்னாள் நகராட்சி தலைவர் லலிதா, துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
யாகம் மதியம், 1:00 மணிக்கு நிறைவடைந்தது. பின், எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் யாகத்தில், ஒன்பது கலசங்களில் வைத்திருந்த புனிதநீரை மேட்டூர் அணைக்கு எடுத்துச் சென்று ஊற்றி, மழை வேண்டி வழிபாடு செய்தனர். வழிபாடு முடிந்த நிலையில் மதியம், 2:30 மணி முதல், 3:30 மணி வரை மேட்டூரில் இடியுடன் கூடிய மழை பெய்தது, அ.தி.மு.க.,வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேட்டூரில் கடைசியாக கடந்த, 8ல் இரவு, 40.8 மி.மீ., மழை பெய்தது. அதன் பின், நேற்று பகலில் ஒரு மணி நேரம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.