தலைவாசல்: தலைவாசல், தேவியாக்குறிச்சி கிராமத்தில், தேவி மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 21ல், காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன், திருவிழா தொடங்கியது. நேற்று மாலை, 4:00 மணியளவில், கருப்பணார் சாமிக்கு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பொங்கலிட்டு, சாமிக்கு படையலிட்டு வணங்கினர். இதையடுத்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக, அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.