பதிவு செய்த நாள்
25
ஜூன்
2019
01:06
மணிமங்கலம், : மணிமங்கலம், செல்லியம்மன் கோவில் குளம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், துார் வாரி ஆழப்படுத்தும் பணி, நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், மணிமங்கலம் ஊராட்சியில், செல்லியம்மன் கோவில் குளம் உள்ளது. குளத்தையொட்டி உள்ள, விவசாய நிலங்களின் பாசன ஆதாரமாக விளங்கி வந்தது. வறட்சியின் காரணமாக, இந்த குளம் தற்போது, ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல், வறண்டு விட்டது.இந்நிலையில், இந்த குளத்தை தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின்கீழ், துார் வாரும் பணி நடந்து வருகிறது. மணிமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த, 130 பேர், தினமும், இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துார் வாரும் பணி, 15 நாட்களாக நடந்து வருகிறது. இதுவரை, 1 அடி ஆழத்திற்கு, குளம் துார் வாரப்பட்டுள்ளது.இதேபோல், அனைத்து ஊராட்சிகளிலும், வறண்டு கிடக்கும் குளம், குட்டைகளை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், முறையாக துார் வாரி, ஆழப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.