மேலுார்: மேலுார் அருகே ஏ.கோயில்பட்டியில் அய்யனார், வீரகாளியம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன் தினம் கிராமம் சார்பில் செய்யப்பட்ட புரவிகள் மந்தைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று மந்தையில் இருந்து அரை கி.மீ., துாரத்திலுள்ள கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு அர்ச்சனைகள் நடந்தன. சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர்.