பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
11:06
நரசிங்கபுரம் : நரசிங்கபுரம், லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் துவங்கியது. பேரம்பாக்கம் அடுத்துள்ள நரசிங்கபுரத்தில் உள்ளது, மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில். இந்த கோவிலில், இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவம், நேற்று முன்தினம், காலை, 5:00 மணிக்கு அங்குரார்பணத்துடன் நடைபெற்றது. நேற்று காலை, 6:00 மணிக்கு மேல், 7:30 மணிக்குள், ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன்பின், காலை, 8:00 மணிக்கு, உற்சவர் சப்பரத்திலும், இரவு, 7:00 மணிக்கு, சிம்ம வாகனத்திலும் வீதியுலா நடந்தது.
இன்று காலை, 7:00 மணிக்கு, ஹம்ச வாகனத்தில் உற்சவர் வீதி உலாவும், இரவு சூர்ய பிரபை வாகனத்திலும், நரசிம்ம பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.நாளை காலை, 6:00 மணிக்கு, கருட சேவையும், இரவு, 7:00 மணிக்கு, அனுமந்த வாகனத்திலும் சுவாமி எழுந்தருள்வார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், ஜூலை, 1ம் தேதி, காலை, 6:00 மணிக்கு நடைபெறும்.