சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே உள்ள, சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தனி உடனுறை சுயம்பிரகதீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினமான நேற்று வடுக பைரவர் பூஜை நடந்தது. இக்கோயிலில் வடுக பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு சன்னதி முன்பாக யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பைரவருக்கு 21 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.