பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
12:06
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் மிருத்திகா பிருந்தாவனம் 12ம் ஆண்டு, ஸ்ரீபிராதுர்பாவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் அவதார தலமாகிய புவனகிரியில், மந்திராலயம் 1008 ஸ்ரீஸ்ரீஸூஷமீந்திர சுவாமிகளால் மிருத்திகா பிருந்தாவனம் துவக்கப்பட்டது. இங்கு ஆண்டு தோறும் துவக்க விழாவில் பல்வேறு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
பனிரெண்டாம் ஆண்டு துவக்க விழாவான நேற்று, ஸ்ரீபிராதுர்பாவோத்ஸவத்தை முன்னிட்டு, காலை 5.00 மணிக்கு சுப்ரபாதம், நிர்மால்ய அபிேஷகம், காலை 6.00 மணிக்கு கலச பூஜை, காலை.8.00 மணிக்கு பிராதுர்பாவோத்ஸவ ஹோமங்கள் நடந்தது. காலை 11.00 மணிக்கு மகா அபிேஷகம் நடந்தது. பகல் 1.00 மணிக்கு தீபாராதனையை கோவில் அர்ச்சகர்கள் நரசிம்மாச்சாரியார், ரகுஆச்சாரியர் நடத்தி வைத்தனர். பல்வேறு பூஜைகளுக்குப் பின் ஆறுமுகம், செந்தில், சூர்யா குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை அறங்காவல் குழு முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன், ராமநாதன், உதயசூரியன், கதிர்வேல் செய்திருந்தனர்.