பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள இரு தேர்களும் வெயில், மழையில் வீணாவதை தடுக்க அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பெரிய திருத்தேர் தோராட்டம் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு புதியதாக அம்மனுக்கு தனித்திருத்தேர் ரூ.30 லட்சம் செலவில் தயார் செய்யப்பட்டது. அதன் வெள்ளோட்டம் கடந்த 5 ம் தேதி நடந்தது. கடந்த 14ம் தேதி வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி பெரிய திருத்தேர் தேரோட்டம் நடந்தது. தோராட்டம் முடிந்த பின் இரு தேர்களும் வெயிலில் காய்ந்து வருகிறது. தற்போது மழைகாலம் துவங்க உள்ளதால் மழையில் நனைந்தால் திருத்தேர் சேதமடையும். இவற்றை மூடி பாதுகாத்திட அறநிலையத்துறை சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.