மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டையில் மழைவேண்டி அனைத்து மதத்தை சேர்ந்த பெண்கள் தேவாலயத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர். கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள நகர, கிராம பகுதிகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த கோணங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய வளாகத்தில், மழை வேண்டி, அனைத்து மதத்தை சேர்ந்த பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். அனைவரும் பொங்கல் பானையை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சுமந்து சென்றனர். பின்னர் சிறப்பு திருப்பலி உதவி பங்குத் தந்தை அலெக்ஸ் ஒளி தலைமையில் நடைபெற்றது.