சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே அதிகாரிபட்டியில் முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் ஆகிய கோயில்களில் ஆண்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த ஜூன் 23 அன்று இரவு அம்மனுக்கு கரகம் ஜோடித்து வான வேடிக்கை, கும்மி பாட்டு, கோலாட்டம், தேவராட்டம், மேளதாளம் முழங்க அம்மன் கோயிலை அடைந்தார். நேற்று முன்தினம் (ஜூன்., 24ல்) காலை மாவிளக்கு, அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதையடுத்து பொங்கல் வைத்து கிடா வெட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. அன்று இரவு வள்ளி திருமணம் நாடகம் நடந்தது.