பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
02:06
வீரபாண்டி: தேய்பிறை அஷ்டமியான நேற்று (ஜூன்., 25ல்), சேலம் கரபுரநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு யாகபூஜைகள் செய்யப்பட்டு, யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலசங் களில் இருந்த புனிதநீரை கொண்டு, பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தனம், திருநீரு, செவ்வரளிப்பூக்கள் மற்றும் எலுமிச்சம் பழ மாலைகளால் பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
* தலைவாசல், ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள, பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பால், தயிர், நெய் உள்ளிட்டவற்றால், மூலவர் காமநாதீஸ்வரருக்கு அபிஷேகங்கள் நடந்தன. ஐந்து வகை எண்ணெய்களால், பக்தர்கள் தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டனர். காமநாதீஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோர், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். அஷ்டபுஜ காலபைரவர் சன்னதியில், சிறப்பு யாகம் நடந்தது.