பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
02:06
மாமல்லபுரம் : திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு, புதிய அலங்கார தேர் உருவாக்க, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், 108 வைணவ கோவில்களில், 62ம் கோவில். உற்சவர் நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடன் வீற்றுள்ளார்.
திருமண, ராகு, கேது தோஷ பரிகாரத்திற்கு சிறப்பு பெற்றது. தொல்லியல் துறை, சில ஆண்டு களாக, திருப்பணிகள் செய்து, ஹிந்து சமய அறநிலையத் துறை, கடந்த ஆண்டு ஜூலையில், கும்பாபிஷேகம் நடத்தியது. இச்சூழலில், பிரம்மோற்சவ, சுவாமி திருத்தேர் வீதியுலாவிற்கு, புதிய தேர் உருவாக்க வேண்டியது அவசியம்.கோவில் நிர்வாகமோ, பழமையான, சிறிய தேரையே, தற்போதும் பயன்படுத்துகிறது. கோவில் சிறப்பு கருதி, அலங்கார தேர் உருவாக்க, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.