பதிவு செய்த நாள்
26
ஜூன்
2019
02:06
காஞ்சிபுரம் : பெரிய காஞ்சிபுரம், பாண்டவ சமேத திரவுபதியம்மன் கோவில், அக்னி வசந்த விழாவையொட்டி, அர்ச்சுனன் தபசு மரம் ஏறி தவம் புரியும் நிகழ்ச்சி நடந்தது.பெரிய காஞ்சி புரம், பாண்டவ சமேத திரவுபதியம்மன் கோவில், அக்னி வசந்த உற்சவம், கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடந்த, 20ம் தேதி முதல், இரவு, 9:00 மணிக்கு, குண்டையார் தண்டலம் மாரியம்மன் தெருக் கூத்து நாடக சபாவின், மஹாபாரத தெருக்கூத்து நாடகம் நடந்து வருகிறது. நேற்று 25ம் தேதி காலை, அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.இதில், அர்ச்சுனன் தனது எதிரிகளை கொல்ல, பகலி என சொல்லக்கூடிய, வில் வற்றாக, அம்பை சிவனிடத்தில் வாங்குவதற்காக, 40 அடி உயர தபசு மரத்தில், இடது காலால் ஊன்றி, வலது காலை தூக்கி, கண்களை மூடி, கைகளைக் கூப்பி, வேண்டிக் கொண்டு மேலே ஏறி, தவம் புரியும் நிகழ்ச்சி நடந்தது.வரும், 30ம் தேதி காலை, துரியன் படுகளமும், மாலை, தீமிதி விழாவும் நடைபெறுகிறது.