பதிவு செய்த நாள்
27
ஜூன்
2019
11:06
திருத்தணி முருகன் கோவிலில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்தின் மீது, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்விளக்குகளால் ஆன வேல் பொருத்தம் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில், மலைக்கோவிலில் உள்ள மாடவீதிக்கு முன்பாக, 3.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் நிர்வாகம், 123 அடி உயரத்திற்கு ராஜகோபுரம் கட்டும் பணிகளில் நிறைவடைந்தது. மேலும், ராஜகோபுரத்தில் இருந்து, மாடவீதிக்கு இணைப்பு படிகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.இந்த நிலையில், சென்னை, குன்றத்துார் பகுதியைச் சேர்ந்த ஒரு பக்தர், கோவிலுக்கு, 5 லட்சம் ரூபாய் காணிக்கை வழங்கி, ராஜகோபுரம் மீது, மின்விளக்குகளால் ஆன, 45 அடி உயரத்திற்கு வேல் பொருத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, ராஜகோபுரத்தின் மீது, கோவில் நிர்வாகம் வேல் பொருத்தம் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.