பதிவு செய்த நாள்
27
ஜூன்
2019
11:06
பழநி: பழநி முருகன் கோவில், அதன் உபகோவில் உண்டியல்களில், 50 நாட்களில், 5, கோடியே, 18 லட்சத்து, 42 ஆயிரம் ரூபாய், காணிக்கையாக கிடைத்துள்ளது. பழநி முருகன் கோவில், 2018 - -19ம் ஆண்டு கணக்கு முடிக்க, நேற்று மலைக் கோவில் கார்த்திகை மண்டபத்தில், உண்டியல் எண்ணிக்கை நடந்தது.இதில், தங்கம்-, 491 கிராம், வெள்ளி, -17 கிலோ, வெளிநாட்டு கரன்சி-கள், 404, ரொக்கமாக, 1 கோடியே, 7 லட்சத்து, 47 ஆயிரத்து, 840 ரூபாய் கிடைத்துஉள்ளது.ஏற்கனவே, ஜூன், 10, 11, 17 ஆகிய மூன்று நாட்கள் நடந்த உண்டியல் எண்ணிக்கையில், 4 கோடியே, 10 லட்சத்து, 95 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.நேற்றைய உண்டியல் வசூல் சேர்த்து, மொத்தம், 5 கோடியே, 18 லட்சத்து, 42 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.ஓராண்டுக்கு, உண்டி யலில் மட்டும், 40 கோடி ரூபாய்க்கு மேல் காணிக்கை கிடைப்பதாக, கோவில் அதிகாரிகள் கூறினர்.