பதிவு செய்த நாள்
27
ஜூன்
2019
11:06
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.கோவில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார். ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர்.கோவில் கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன் ஆகியோர் பங்கேற்றனர். கோவிலில் உள்ள, நிரந்தர உண்டியல்களில், 35 லட்சத்து, 93 ஆயிரத்து, 671 ரூபாயும்; தட்டு காணிக்கை உண்டியல்களில், ஒன்பது லட்சத்து, 99 ஆயிரத்து, 474 ரூபாயும் காணிக்கை இருந்தது. மொத்தம், 45 லட்சத்து, 93 ஆயிரத்து, 145 ரூபாய் வசூலாகியது. மேலும், 229 கிராம் தங்கம் மற்றும் 1,090 கிராம் வெள்ளி இருந்தது.