காரைக்கால்: காரைக்காலில் மழை வேண்டி வக்பு நிர்வாக சபை சார்பில் கடற்கரையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. காரைக்காலில் நிலவி வரும் வறட்சியை போக்கிட, மழை வேண்டியும், மக்கள் நலன் காக்க வேண்டி வக்பு நிர்வாக சபை சார்பில் கடற்கரை சாலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மழை வேண்டி இலாஹிபள்ளி இமாம் ரகமத்துல்லா சிறப்பு தொழுகையை துவக்கி வைத்தார்.இதில் 200க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் மழைவேண்டி தொழுகையில் ஈடுப்பட்டனர்.