வால்பாறை : வால்பாறை கோவில்களில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை தரிசிப்பதற்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் காலபைரவருக்கு அஷ்டமி தினமான நேற்று முன் தினம் மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.