விருத்தாசலம்:விருத்தாசலத்தில் திருமுதுகுன்றம் சேக்கிழார் செந்தமிழ்ச் சங்கம் சார்பில், சேக்கிழார் குரு பூஜை நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சன்னதி வீதி, தனியார் திருமண மண்டபத்தில் காலை 6:00 மணியளவில் சேக்கிழார் குருபூஜை விழா துவங்கியது. கொடியேற்றுதல் மற்றும் குத்துவிளக் கேற்றும் நிகழ்ச்சிகள் நடந்தன. 6:30 மணியளவில் சேக்கிழார் குரு பூஜை நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சேக்கிழார் வீதியுலா நடந்தது.காலை 10:30 மணியளவில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. கரந்தை திருமுறைக்கழக வெங்கடேசன், சேக்கிழார் தமிழ்ச்சங்க தலைவர் பரமசிவம், செயலர் வெங்கடாசலம், பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகி பால்ராஜ், நால்வர் வழிபாட்டு சங்க தலைவர் முத்துக்குமரன், காளீஸ்வரன், ஆலோசகர் பொன்னம்பலம், பொறியாளர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.