பதிவு செய்த நாள்
01
ஜூலை
2019
12:07
பழநி: பழநி சண்முக நதிக்கரை பெரியாவுடையார் கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவான், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன் பார்வதி ரிஷப வாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். இடும்பன் கோயிலில் ரிஷபவாகனத்தில் உள்ள சிவகிரிநாதர், உமாமகேஸ்வரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்தில், திருவுலா நடந்தது. மலைக்கோயில், பெரியநாயகியம்மன் கோயில், கைலாசநாதர், சன்னதிவீதி வேளீஸ்வரர்கோயில், மதனபுரம் அண்ணாமலையார், உண்ணாமலைநாயகி கோயில், நேதாஜிநகர் காமாட்சியம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோயில், புதுநகர் சிவன் ஆகிய கோயில்களில் அபிஷேகம், பூஜைகள் நடந்தது.