பதிவு செய்த நாள்
01
ஜூலை
2019
03:07
நகரி: வாயுலிங்கேஸ்வரர் கோவில் உண்டியலில், 31 நாட்களில், 1.37 கோடி ரூபாய் ரொக்கம், காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி, வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 31 நாட்களில், பக்தர்கள் உண்டியல்களில் அளித்த காணிக்கை, கோவில் அதிகாரி ராமசாமி முன்னிலையில், கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களால் எண்ணப்பட்டது.இதில், 1 கோடியே, 37 லட்சத்து, 60
ஆயிரத்து, 234 ரூபாய் ரொக்கம், 130 கிராம் தங்கம், 629 கிலோ வெள்ளி மற்றும் 136 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.