திருத்தணி: திருத்தணி சுப்ரமணியபுரம் பகுதியில், நேற்று (ஜூன்., 30ல்), ரோகிணி பூஜையை யொட்டி, கோகுல கிருஷ்ணர் கல்யாண உற்சவ விழா நடந்தது. அதை தொடர்ந்து, உற்சவர் கோகுல கிருஷ்ணருக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. அதன் பின், நடந்த கல்யாண மாலை பூஜையில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.