பதிவு செய்த நாள்
01
ஜூலை
2019
03:07
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதி சிவன் கோவில்களில் மார்கழி மாத இரண்டாம் பிரதோஷ வழிபாடு நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் செம்பொற் ஜோதிநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
இதேபோல் கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், நீலமங்கலம், கமலா நேரு தெரு ஏகாம்பரேஸ் வரர், ஏமப்பேர் விஸ்வநாதர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், முடியனூர், தென்கீரனூர் அருணாசலேஸ்வரர், தண்டலை சுயம்பு நாதேஸ்வரர், கனங்கூர் ராமநாதீஸ்வரர், வரஞ்சரம் பசுபதீஸ்வரர், சடையம்பட்டு கேதாரீஸ்வரர், வடக்கநந்தல் உமாமகேஸ்வரர், ஆலத்தூர் திருவாலீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு நடந்தது.சின்னசேலம்: தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டையொட்டி, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்தீஸ்வர ருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சின்னசேலம் கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் பெரியநாயகி உடனுரை சொர்ணபுரீஸ்வரர், அசலகுசலாம்பிகை சமேத பஞ்சாட்சரநாதர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.