மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் நேற்று (ஜூன்., 30ல்) பிரதோஷ வழிபாடு நடந்தது.
மயிலம் அடுத்த ஆலகிராமத்திலுள்ள சிவன் கோவிலில் நேற்று (ஜூன்., 30ல்)பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப்பொருட்க ளினால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இது போன்று மயிலம் சுந்தர விநாயகர் கோவில்; ரெட்டணை, பெரும்பாக்கம், நெடி, பாதிராப்புலியூர், தென்பசியார், செண்டூர், கொல்லியங்குணம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.