பதிவு செய்த நாள்
01
ஜூலை
2019 
04:07
 
 விருத்தாசலம்: கிருத்திகையை முன்னிட்டு, விருத்தாசலம் கோவில்களில் முருகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமி களுக்கு நேற்று முன்தினம் 29ல், காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு மேல் ராஜ அலங்காரத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர்.மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக் கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமிகள் அருள் பாலித்தனர்.அதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.